DreamLand

Thursday, August 30, 2007

True Love has come to an end...

I first met her on April 14th, 2003 when I joined this office...

Ours was love at first sight...

We had tremendous love for each other...

I come to office quite early to meet her...

Spending 8-9 hrs with her in the office was awesome...

Sometimes I wanted to spend more time with her, so I stayed late...

I could not be away from her over the weekends, so I come to office over the weekends too...

She helped me a lot...

She showed me the world...

She made sure I am in touch with my friends...

She has seen my joys and sorrows...

We spent the past 4.5 yrs together, sharing lot of moments and feelings...

She is definitely true love of mine...

But today, she was taken away from me...

With a weighted heart and tearing eyes, I have to say good bye to her...

She no longer belong to me...

Yes, this is what happens when you need to upgrade to a laptop from a 4.5 yrs old desktop :)



My last photograph with my PC :)

Friday, August 17, 2007

சும்மா ஒரு ஜாலி!

காலில போடுவாங்க செருப்பு,
உன் கூட பேசின நாளே எனக்குள்ள நெருப்பு!

உடம்புல இருக்குது கொழுப்பு,
உன்ன பார்க்காம மனசு படுது தவிப்பு!

School-அ குடுப்பாங்க தலைல கொட்டு,
நீ புதுசா பூத்த மொட்டு!

Round-ஆ இருக்கும் தட்டு,
நா உனக்கு ஊட்டி விடுவேன் கொலாப் புட்டு!

திருப்பதில தருவாங்க லட்டு,
உன்ன நினைச்சா எனக்கு தேவையில்லை Food-உ!

படுத்து தூங்கறுதுக்கு வேனும் Bed-உ!
நீ இல்லைனா என் வாழ்க்கை வெறும் Mud-உ!

hi! hi!

Saturday, August 11, 2007

என்ன வாழ்க்கை இது?

இதுவரை படித்ததன் பலன்,
10-வது பரிட்சையில் நல்ல மதிப்பெண்
எடுத்து PASS-ஆவதில் என்றார்கள - எடுத்தேன்!

+2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து,
நல்ல கல்லூரியில் சேர்ந்துவிடு, பிறகு
எந்த பிரச்சினையுமில்லை என்றார்கள் - சேர்ந்தேன்!

Assignments, Exams, Arrears, Projects என
பயமுறுத்திக் கொண்டிருந்த வேளையில்
Campus Interview-வில் select-ஆகி விட்டால்
Career settled என்றார்கள்!

நான் படிக்கும் போதுதானா US-ல்
Recession வரவேண்டும்? அதையும் மீறி வந்த
இரண்டு Company-களில் ஒன்றில் வேலையும் வாங்கினேன்!

Bugs, Deadlines, Performance, Appraisal என
பல முனைத்தாக்குதல்கள்!

இந்த தாக்குதல்களுக் கிடையில்
நண்பர்கள் அனைவரும்
எனதை விட நல்ல வேளையில்
எனனை விட நல்ல சம்பளத்தில்
சேர்ந்த விட்டார்கள்!

போட்டி போட்டே ஆக வேண்டும்!
பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்!

உலகம் முழுதும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உழைத்தேன்!
பணி முடிந்த காலை 3 மணியிலிருந்து
பேருந்து வரும் 5 மணி வரையிருந்த
இரண்டு மணி நேர இடைவெளியில் கூடப் படித்தேன்!

உலகம் உழைத்துக் கொண்டிருந்த வேளையில்
நேர்முகத் தேர்வுகளில் நித்திரையுடன் அமர்ந்திருந்தேன்!

மூன்று மாத முயற்சி வீண் போகவில்லை!
வேறு வேலை வாங்கி விட்டேன்!
நல்ல Company, நல்ல சம்பளம்!

ஆனால் இங்கும் அதே தாக்குதல்கள்!
புதிது புதிதாக வரும் Technology-களைப் படிக்க வேண்டும்!
Promotion-காக உழைக்க வேண்டும்!

MBA படித்து விடு, நல்ல பதவி விரைவில்
கிடைக்குமென சித்தப்பா சொல்கிறார்!
நகரத்தில் ஒரு வீடு வாங்க அப்பா சொல்கிறார்!
திருமணத்திற்கு நகை சேர்க்க அம்மா சொல்கிறார்!

வெளிநாடு சென்று
இரண்டாண்டுகள் வேலை செய்தால்
இவையனையத்தையும் பூர்த்தி செய்துவிடலாம்,
நண்பர்கள் சொல்கிறார்கள்!

போதுமடா சாமி! போராட்டத்திலேயே,
வாழ்க்கையின் அத்தனை நாட்களையும் இழந்து விட்டால்,
என் வாழ்க்கையை நான் வாழ்வது எப்போது?

இயற்கையுடன் ஓர் உரையாடல்,
மாலையுடன் ஒரு மோதல்,
இரவுடன் ஒரு ஊடல்,
மாலையும் இரவும் சந்தித்துக் கொள்ளும் வேளையில்
என் காதலியுடன் ஒரு கூடல்!

நாளை மலர இருக்கும்
பிஞ்சுக் குழந்தைகளுடன் ஒரு நெருக்கம்!

பின்னிரவு வரை என் சகாக்களுடன்
நடத்திட வேண்டும் அரட்டை அரங்கம்!

அன்பு கலந்த அம்மாவின்
சமையலைத் தின்று விட வேண்டும் ஏப்பம்!

என என் நெஞ்சு ஏங்கும் ஏக்கம்
இறைவா உனக்காயினும் கேட்கிறதா?

~

Wednesday, August 08, 2007

என்னவளிடம்!

உயிர்த் தோழி ஒருத்தி
உரையாடலின் போது சொன்னாள்!

மின்னஞ்சல் பல அனுப்பி
தினமும் என் நேரத்தைத் தொலைக்கிறான்!

புகைப்படங்கள் அனுப்பி,
பாரெனப் படுத்திகிறான்!

தொலைபேசியிலும் அழைத்துத்
தொல்லை தருகிறான்!

சொல்லி முடித்த பிறகு
எள்ளி நகையாடினாள்,
கஜினி முகமது-விற்குப் பிறகு
விடாமுயற்சிக்கு இவனும்
ஓர் எடுத்துக்காட்டு, என்று!

என்னைப்போல் இன்னொருவனும்
இதேபோல் ஓர் உரையாடல் கொண்டிருப்பானோ?

என்னவளிடம்!

~

Tuesday, August 07, 2007

அவள்!

மான் மயங்கும் விழிகள்!

தேன் நிறைந்த இதழ்கள்!

கார்மேகம் கண்டு ஏங்கும் கருங்கூந்தல்!

சந்தனச் சிலையோ வெனவென் சிந்தையைக் குலைக்கும் நிறம்!

அம்புதனின் கூர்மைக்குச் சவால் விடும் பார்வை!

வில்லின் வழைவுகளைக் குறைத்துக் காட்டும் இடை!

பட்டின் மென்மைக்கு மேலான மிருதுவான பாதம்!

செம்பருத்திப் பூக்களின் மகரந்தம் கொண்டு செதுக்கி இழைத்த தேகம்!

அழகு என்ற சொல்லுக்கு இலக்கனம் அவள்!

அன்பு என்ற சொல்லின் அவதாரம் அவள்!

என் சிரத்தினை அறுத்திடினும், கருத்தினில் அவள் நிலைத்திருப்பாள்!

~