DreamLand

Tuesday, September 15, 2020

New reservation for Govt School students

 செய்தி: அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் ஆகியவற்றில் 6முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்தியேகமாக உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார்.


எனக்கு தெரிஞ்சு இந்த வரிசையில் நிகழ்வுகள் இருக்கும்:


இந்த வருட மருத்துவ சேர்க்கை முடிந்த பிறகு, 2021 சட்டமன்றதேர்தலுக்கு முன்பாக இந்த அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும்...


அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கிறாரா இல்லையா என்பது வேறு விசயம்.


2021 தேர்தலில் கூடுதல் வாக்கு வாங்க இந்த சட்டம்/அறிவிப்பை அதிமுக பயன்படுத்தும்...


தேர்தல் முடிந்த கையோடு, இந்த சட்டத்தை எதிர்த்து ews கூட்டம் வழக்கு தொடுக்கும்...இந்த சட்டம் நடைமுறைப் படுத்துவதற்கு முன்பே, குப்பையில் வீசப்படும்...


இதற்கு ஒரே தீர்வு, எந்த நிபந்தனையுமற்ற, நிரந்தர NEET ஒழிப்பு மட்டுமே...


இந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு மேலும் பல பாதகங்களை ஏற்படுத்தும் என்பது அடிமை அரசுக்கு தெரியாதா, அல்லது வெளிவேசமா என்பதை மக்களே முடிவு செய்வர்.

0 Comments:

Post a Comment

<< Home