DreamLand

Wednesday, July 17, 2019

புள்ளியில்லாத கோலம் !!

புள்ளியில்லாத கோலம் !!

அதிகாலை வேளை,
ஞாயிறு புலராத காலை,
சூரிய ஒளி காணாத சோலை,
பல ராகமழை பாடுவது குயிலோ,
மழை வருமோவென ஆடுவது மயிலோ,
சிறு ஆறு மருவி 
ஆனதொரு பெருமருவி,
அருவியினது ஓசைகூட
இனியதான இசையானதோ!

இவை நாடாத மனமே,
நீ தேடுவது எதனை ?
எது இராது கூடுவது உனது வேதனை ?

நெடுமுடியுடையாளது வாசனை வீசாததோ,
தேனுடை மொழி பேசி கேளாததோ,
கொடியிடையுடைய கோதை பாராததோ,
அவளது விரலிடை படாததோ ?

கூறுகளான எனது மனமே கூறுவது கேளடி...

சோதனைகளாலேயான எனது வேதனை போதுமடி,

நீயெனது கடகியாகி உடனுறையாத  காலமே வீணாகுதடி,

மனமோ சாதகமானதொரு முடிவறிய நாடுதடி,

பாதகமானதொரு முடிவு நீ எறிய எனது வாழுதலே முடியுமடி!


~

0 Comments:

Post a Comment

<< Home