DreamLand

Sunday, September 20, 2020

Kalaignar - Eelam

 


எதிரியின் கோட்டைக்குள் சென்று போரிட்டு 

மார்பில் ஈட்டி வாங்குபவன் மாவீரன்!


தன்மக்களை மட்டுமின்றி தன்மகனையும் 

மனித கேடயமாக காட்டி பிழைத்தவன்?


தாய்ப்பறவை தனைக்காக்கும் என்றெண்ணிய தன்மக்களை 

பருந்திடம் அளித்துப் பொந்தினுள் ஒளிந்தான்!


சொந்த பிஞ்சுகள் கறித்துண்டங்களாய் கிடக்கையிலே 

பொந்துவிட்டு பொந்துமாரிய அவன் சொந்தமாய் நினைத்தது அவனுயிரை மட்டும்தானா!


தலைவனாக தான் சரணடைந்திருந்தால் 

லட்சம் உயிர் பிழைத்திருக்குமே!

தன்மக்கள் உயிரை மட்டும் துச்சமென நினைத்ததால் 

அவனுயிரும் பிழைக்கவில்லையே!


இந்தியாவின் தலைமகனைத் தமிழகத்திலே கொண்று 

தமிழகத்தின் தலைமகனாம் என் தலைவனுக்கு பழியுண்டாக்கினான்!


துப்பாக்கிகளும் பீரங்கிகளும் மட்டுமல்ல 

சாதுர்யமும் சாணக்கியமும்தான் பேராயுதம்!

அவைதவிர்த்த இவன் என் தலைவனை நிராயுதபாணி ஆக்கினான்!


கவலையின்றிச் செத்தொழிந்த அவன் தியாகியாகி நின்றான் 

கையறு நிலையில் கவலைப்பட்ட என் தலைவன் துரோகியெனும் பட்டம் சுமந்தான்!

எதையும் தாங்கும் இதயம் கொண்டவனவன் இதையும் தாங்குவான் !

0 Comments:

Post a Comment

<< Home