DreamLand

Wednesday, November 11, 2020

மாநிலங்களவை

 அமெரிக்கா


மாநிலங்களின் எண்ணிக்கை  - 50

செனட் உறுப்பினர்களின் எண்ணிக்கை (50 X  2) - 100


ஆஸ்திரேலியா :


மாநிலங்களின் எண்ணிக்கை  - 6

பிரதேசங்கள் - 2

செனட் உறுப்பினர்களின் எண்ணிக்கை (6 X 12 + 2 X  2) = 76


இந்த இரண்டு நாடுகளிலும், செனட் சபை என்பது, நம் நாட்டிலுள்ள ராஜ்யசபை அல்லது மாநிலங்களவை போன்றது. நம் நாட்டை போலவே, எந்த ஒரு புதிய சட்டம் மற்றும் தீர்மானங்கள், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான், நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.


ஒரு இந்த இரண்டு நாடுகளிலும், செனட் உறுப்பினர்கள், தேர்தல்கள் மூலம், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்; அதனால் ஒரு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் படும் நபர், அந்த மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படவே வாய்ப்புகள் அதிகம். 


ஆனால் நம் நாட்டில், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இதன்மூலம், ஒரு அரசியல் கட்சி நினைத்தால், ஒரு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, வேறு எந்தவொரு மாநிலத்தை பிறப்பிடம் மற்றும் உறைவிடமாகக் கொண்ட ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர், தனது சொந்த மாநிலத்தின் நலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவாரா, அல்லது தான் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநிலத்தின் உரிமையை கருத்தில் கொண்டு செயல்படுவாரா? மேலும் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படாத ஒருவர், மக்கள் நலனைத்தான் கருத்தில் கொண்டு செயல்படுவாரா?


மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் இருந்து கிடைக்கும் இன்னுமொரு செய்தி, மாநிலங்களின் நலனை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரே எண்ணிக்கையிலான உறுப்பினர்கள், அனுமதிக்கப் படுகின்றனர். இதில் அந்த மாநிலத்தின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. இதனால் அதிக மக்கள் தொகை கொண்ட, அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களின் நலன் மட்டுமே முன்னிலை படுத்தப்படும் போக்கு பெருமளவில் தடுக்கப் படுகிறது.


ஆனால் நம் நாட்டிலோ, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொருத்தே அமைவதால், அதிக மக்கள் தொகை கொண்ட வடக்கை சேர்ந்த சில மாநிலங்கள், அவர்களின் நலன் சார்ந்த திட்டங்களை, தெற்கு அடையவிருக்கும் தீமைகளை கருத்தில் கொள்ளாமல், ஆதரிக்கும் போக்கு தொடர்கிறது.


இதனால்தான் அறிஞர் அண்ணா அன்றே கூறினார். மாநிலங்களவையில், பெயருகேற்றது போல, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம அளவிலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்; மேலும் அவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படவும் வேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home